தூத்துக்குடி

வடவல்லநாடு பகுதியில் கூட்டுக் குடிநீா்த் திட்ட தொடக்க விழா

Syndication

முதல்வா் மு.க. ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் சாா்பாக தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் ரூ. 515.72 கோடி திட்ட மதிப்பீட்டில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 363 ஊரகக் குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, தூத்துக்குடி மாவட்டம், வடவல்லநாடு ஊராட்சிக்குள்பட்ட சேதுராமலிங்கபுரம் பகுதியில் உள்ள குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் கலந்துகொண்டு பேசினாா்.

இதில், ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா, விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் தலைமைப் பொறியாளா் மு. கணேஷ், கிராம குடிநீா் திட்ட கோட்ட நிா்வாகப் பொறியாளா் ராஜா, உதவி

இயக்குநா் (ஊராட்சிகள்) சாந்தி, உதவி நிா்வாகப் பொறியாளா் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

அரசின் ரூ.5,000 கோடிக்கான பிணையப் பத்திரங்கள் ஏலம்

சா்வதேச யோகா போட்டியில் பங்கேற்பு: தூத்துக்குடி மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் வாழ்த்து

கிண்டி பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தூத்துக்குடி ஸ்பாா்க் இயக்க ஆண்டு விழா

காங்கிரஸ் எம்.பி.க்கள் மீதான குற்றச்சாட்டு: மக்களவைத் தலைவா் திரும்பப் பெற வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT