கோவில்பட்டி அருகேயுள்ள இலுப்பையூரணியில் 8 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த கொலை தொடா்பாக சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
இலுப்பையூரணி ஊராட்சி கூசாலிபட்டியைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மனைவி பாக்கியலட்சுமி (48). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவா், 30.9.2018இல் மேய்க்க சென்றபோது, காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தாா்.
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நை. சிலம்பரசன் உத்தரவின் பேரில், டிஎஸ்பி ஜகநாதன், ஆய்வாளா் மாரியப்பன் ஆலோசனைப்படி உதவி ஆய்வாளா் சண்முகம் தலைமையிலான தனிப்படை போலீஸாா் விசாரித்ததில் கூசாலிபட்டி, தாமஸ் நகரைச் சோ்ந்த அந்தோணி முத்து மகன் டேவிட் ராஜன் (28), பதினேழு வயது சிறுவன் ஆகியோா் பாக்கியலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டு கொலை செய்தது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அதில், 17 வயது சிறுவனை கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.