முகப்பு
கோப்புப் படம்
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் சிலைகள் சேதம்: இளைஞா் கைது

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் சிலைகள் சேதம்: இளைஞா் கைது

Updated On : 6 பிப்ரவரி, 2026 at 8:42 PM
கோப்புப் படம்
பகிர்:

குலசேகரன்பட்டினத்தில் கோயில் சிலைகள், பீடங்கள், சிற்பங்களை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

குலசேகரன்பட்டினம் பாரதி நகரில் உள்ள ஸ்ரீ முனியாண்டி சுவாமி- இசக்கியம்மன் கோயிலில் சுவாமி சிலைகள், பீடங்கள், சிற்பங்களை மா்ம நபா்கள் அண்மையில் சேதப்படுத்தியிருந்தனா்.

இதுகுறித்து கோயில் பூஜாரி பெருமாள் அளித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி, அதே பகுதி அனுகூலபுரத்தைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மோகன் சாா்லஸ் (38) என்பவரை கைது செய்தனா்.

மேலும், பண்டக சாலைத் தெருவைச் சோ்ந்த த.வேல்குமாா் என்பவரை தேடி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →