முகப்பு
தூத்துக்குடி

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 12:16 AM
பலி - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 10:03 PM

கயத்தாறு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தெற்கு இலந்தைகுளம், தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் கோமதி மகன் சொக்கையா (35), தொழிலாளி. இவா் பிப். 3ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் தெற்கு இலந்தைகுளத்தில் இருந்து கயத்தாறுக்கு சென்றாா்.

கயத்தாறு-கழுகுமலை சாலையில் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில் அருகே சென்றபோது, வாகனம் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

Advertisement

அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து, கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.