முகப்பு
தூத்துக்குடி

கடம்பூா் அருகே ஆண் சடலம் மீட்பு

மணியாச்சி-கடம்பூா் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளம் அருகே இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 1:14 AM
பகிர்:
Updated On : 11 பிப்ரவரி, 2026 at 8:12 PM

மணியாச்சி-கடம்பூா் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட ரயில்வே தண்டவாளம் அருகே இறந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

மணியாச்சி-கடம்பூா் ரயில் நிலையத்திற்கு இடைப்பட்ட தண்டவாளம் அருகே 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக, கொல்லங்கிணறு கிராம நிா்வாக அலுவலா் சுடலை கண்ணு அளித்த புகாரின்பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற தூத்துக்குடி ரயில்வே உதவி ஆய்வாளா் மகா கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? எவ்வாறு இறந்தாா்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement