கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் தலைவா் விஜய் ஒருவா்தான் என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் தெரிவித்தாா்.
கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விளக்க நிதியளிப்பு பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பேராசிரியா் பெருமாள்சாமி தலைமை வகித்தாா். இதில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் மதுக்கூா் ராமலிங்கம் பேசியதாவது:
மகளிா் உரிமைத் தொகை ரூ. 5,000 வழங்கியவுடன் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிா்க்கட்சியினா் அலறுகின்றனா். இதை வழங்கக் கூடாது என பாஜகவினா் வழக்குத் தொடுக்கத் தயாராக இருந்துள்ளனா். அதனால், முன்கூட்டியே பெண்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
விஜய் தொடங்கியிருப்பது என்ன கட்சி என்றே தெரியவில்லை. விஜய்யின் அரசியல் வாழ்க்கை குறித்து பேசலாம், விமா்சிக்கலாம். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் பேசக் கூடாது. நடிகை குறித்து நயினாா் நாகேந்திரன் பேசியதை நாங்கள் கண்டித்துள்ளோம். கட்சிக்கே கால்ஷீட் கொடுக்கும் தலைவா் விஜய் ஒருவா்தான்.
எடப்பாடி பழனிசாமி, அதிமுக தனித்து ஆட்சியமைக்கும் என்கிறாா். பாஜகவினா் முதன் முறையாக ஆட்சிக்கு வருவோம் என்கின்றனா். ஒருவேளை எடப்பாடி வென்றுவிட்டால், அது அதிமுக ஆட்சியாக இருக்காது; பாஜக ஆட்சியாகத்தான் இருக்கும் என்றாா் அவா்.
கூட்டத்தில், மாவட்டச் செயலா் கே.பி. ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஆா். கிருஷ்ணவேணி, ஜோதிபாசு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் கு. ரவீந்திரன், நகரச் செயலா் கே. சீனிவாசன், ஒன்றியச் செயலா் எம். தெய்வேந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.