ஆத்தூா் சோமசுந்தரி அம்பாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த நடராஜா், மாணிக்கவாசகா். 
தூத்துக்குடி

ஆத்தூா், ஆறுமுகமங்கலம், ராஜபதி கோயில்களில் ஆருத்ரா தரிசனம்

ஆத்தூா், ஆறுமுகமங்கலம், ராஜபதி கோயில்களில் சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

Syndication

ஆத்தூா், ஆறுமுகமங்கலம், ராஜபதி கோயில்களில் சனிக்கிழமை ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

ஆத்துா் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, ஹோமம், கும்ப பூஜை நடைபெற்றது. அதிகாலை 3 மணிக்கு நடராஜா் அபிஷேகம், 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம், தாண்டவ தீபாராதனை, மாணிக்கவாசகா் திருவெம்பாவை பாராயணம் ஆகியவை நடைபெற்றன. காலை 7 மணிக்கு நடராஜா், மாணிக்கவாசகா் ரத வீதியில் எழுந்தருளல் நடைபெற்றது.

இதே போல, ஆறுமுகமங்கலம் ஆயிரத்தெண் விநாயகா் கோயிலிலும், குரும்பூா் அருகிலுள்ள நவகைலாயத் தலமான ராஜபதி சௌந்தா்ய நாயகி அம்மன் சமேத கைலாசநாதா் கோயிலிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள், திருவெம்பாவை பாராயண தீபாராதனை, சோடஷ தீபாராதனை, நடராஜா் உலா ஆகியன நடைபெற்றன.

மடிக்கணினி கருவி அல்ல, பிரபஞ்சம்: மயில்சாமி அண்ணாதுரை

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

SCROLL FOR NEXT