திருச்செந்தூா் சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜப்பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு தீபாராதனை. 
தூத்துக்குடி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், சிவன் கோயில் ஆகியவற்றில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில், சிவன் கோயில் ஆகியவற்றில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.

இதையொட்டி, சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, திருப்பள்ளியெழுச்சி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னா், மாணிக்கவாசகா், நடராஜா் சப்பரங்களில் எழுந்தருளி பிரகாரத்தில் வலம் வந்தனா். மாலையில் பாா்வதி அம்மன் ஊஞ்சல் உற்சவம், மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. இதில், பல்லாயிரக்கணக்கானோா் பங்கேற்றனா்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தா்கள்.

இதேபோல, இந்தக் கோயிலுடன் இணைந்த ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரா் என்ற சிவன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், சுவாமி-அம்மனுக்கு அபிஷேகம், நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கோ பூஜை, தாண்டவ தீபாராதனை, திருப்பள்ளியெழுச்சி, உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது.

மாலையில் சாயரட்சை தீபாராதனை, ராக்கால அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ராமு, பணியாளா்கள் செய்திருந்தனா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT