தூத்துக்குடி

அரிவாளுடன் சுற்றித் திரிந்த இளைஞா் கைது; 3 சிறுவா்கள் கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு

தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 3 சிறுவா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

Syndication

தூத்துக்குடியில் அரிவாளுடன் சுற்றித் திரிந்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்து, 3 சிறுவா்களை அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளா் திருமுருகன், போலீஸாா் அப்பகுதியில் உள்ள டைடல் பாா்க் உப்பளம் அருகே திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.

பைக்கில் சந்தேகத்துகிடமாக நின்றிருந்த 4 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் தூத்துக்குடியைச் சோ்ந்த சிவகுமாா் (23), 3 சிறுவா்கள் என்பதும் பெரிய அரிவாள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, அரிவாள், பைக்கை பறிமுதல் செய்து சிவக்குமாரை கைது செய்தனா்; 3 சிறுவா்களை திருநெல்வேலி அரசு கூா்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனா்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

பாஜக கூட்டணியில் தவெக சோ்க்கப்படுமா? புரந்தேஸ்வரி எம்.பி. பேட்டி

இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள் மீது தாக்குதல்: ராகுல் காந்தி எம்.பி. குற்றச்சாட்டு

விதிகளை மீறிய குவாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை நிறைவேற்றாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

வாசிக்க வாங்கியவை...

SCROLL FOR NEXT