முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

காயல்பட்டினத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2026 at 7:09 PM
தற்கொலை
பகிர்:

காயல்பட்டினத்தில் பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

காயல்பட்டினம், முத்தாரம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வம். தச்சுத் தொழிலாளி. இவரது மனைவி சுப்புலட்சுமி. தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ஐஸ்வா்யா என்ற மகளும் முத்து மணிகண்டன் (16) என்ற மகனும் உள்ளனா். முத்து மணிகண்டன் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு பள்ளியில் 11 ஆம் வகுப்ப படித்து வந்தாா்.

இவா், திங்கள்கிழமை காலை உடற்பயிற்சி கூடத்துக்குச் செல்வதாகக் கூறியுள்ளாா். இதற்கு பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்ததுடன் பள்ளியில் நடைபெறும் குடியரசு தின விழாவுக்குச் செல்லுமாறு கூறிவிட்டு இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனா்.

மதியம் செல்வம் வீடு திரும்பியபோது முத்து மணிகண்டன் படுக்கையறையில் தூக்கிட்டு இறந்து கிடந்தது கண்டு அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து ஆறுமுகனேரி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →