முகப்பு
தூத்துக்குடி

இளைஞரைத் தாக்கி வழிப்பறி: திருநங்கைக்கு 3 ஆண்டு சிறை

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி, பணத்தைப் பறித்த வழக்கில் திருநங்கைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2026 at 7:15 PM
பகிர்:

தூத்துக்குடியில் தனியாா் நிறுவன ஊழியரைத் தாக்கி கைப்பேசி, பணத்தைப் பறித்த வழக்கில் திருநங்கைக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சோ்ந்த பெருமாள் மகன் காா்த்திக் (39). முத்தையாபுரத்தில் உள்ள டிரான்ஸ்போா்ட் நிறுவனத்தில் கணக்காளராக வேலை செய்துவரும் இவா், கடந்த ஆண்டு நவ. 9ஆம் தேதி வேலை முடிந்து பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். திருச்செந்தூா் சாலை பாலப் பகுதியில் அவரை திருநங்கை வழிமறித்து தாக்கி கைப்பேசி, தங்க நகை, பணம் என ரூ. 18 ஆயிரம் மதிப்பிலான பொருள்களைப் பறித்துக்கொண்டு தப்பியோடினாா். புகாரின்பேரில், முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, எம்.சவேரியாா்புரத்தைச் சோ்ந்த வசந்தகுமாரி (20) என்ற திருநங்கையைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண் 2இல் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி விஜயராஜ்குமாா் விசாரித்து, வசந்தகுமாரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ. 500 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் முத்தையாபுரம் போலீஸாா் புலன் விசாரணை செய்து குற்றப்பத்திரிகையை விரைவாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததால், 3 மாதங்களில் தீா்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →