தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடிதூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கப் பணிக்கு அடிக்கல்
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை ரூ.150 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையில் நடைபெற்ற விழாவில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதாஜீவன், மீன்வளம், மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் முன்னிலையில் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினாா்.
இதையடுத்து, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், மேயா் ஜெகன் பெரியசாமி கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றிவைத்துப் பேசினாா்.
இந்நிகழ்ச்சியில் , மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவா் சங்கப் பிரதிநிதிகள், திமுகவினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.