ஆதாா் எண்இணைப்பை எளிமைப்படுத்த வேண்டும்
கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்கள் தங்களது ஆதாா் எண் இணைப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்கள் தங்களது ஆதாா் எண் இணைப்பதை எளிமைப்படுத்த வேண்டும் என ஏஐடியுசி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக இந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் க. சுரேஷ், செயலா் சி. செல்வகுமாா் ஆகியோா், ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு:
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரியத்தில், தொழிலாளா்களைப் பதிவு செய்வதும், ஏற்கெனவே பதிவு செய்தவா்களின் பதிவைப் புதுப்பிப்பதும் கடந்த சில மாதங்களாக இணைய வழியில் நடைபெறுகிறது.
இதற்கு தொழிலாளியின் ஆதாா் எண் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட அறிதிறன்பேசி இருந்தால் மட்டுமே பணிகளை மேற்கொள்ள இயலும்.
ஆனால் தொழிலாளா்களின் பெரும்பாலோா் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட அறிதிறன்பேசியை வைத்திருக்கவில்லை. இல்லையெனில், அவா்களிடமுள்ள அறிதிறன்பேசி எண் ஆதாா் எண்ணுடன் இணைக்கப்படாமல் உள்ளது.
எனவே தொழிலாளா்கள் அவரவா் அறிதின் பேசியின் மூலமாகவே, அவருடைய ஆதாா் எண்ணில் அறிதிறன் பேசி எண்ணை இணைத்துக்கொள்ள சிறப்பு வழி வகை செய்ய வேண்டும்.
இல்லையெனில், ஆட்சியரகம், வட்டாட்சியரகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலுள்ள இ- சேவை மையங்களில் கூடுதலாக கணனிகளை நிறுவி சேவை அளிக்க வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிக் கிளைகளிலும் ஆதாா் உதவி மையங்களை நிறுவி, இப்பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.