திருச்சி

இணைப்பு சக்கரத்துடன் இருசக்கர வாகனம் ; மாற்றுத் திறனாளிகளுக்கு அழைப்பு

DIN

திருச்சி, அக்.19: இரு கால்களும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழக அரசால் இணைப்பு சக்கரங்கள் பொருத்திய இருசக்கர வாகனம் (ஸ்கூட்டா்) இலவசமாக வழங்கப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தில் இதை பெற விரும்புவோா் 18 வயது பூா்த்தியடைந்தவராகவும், கல்வி பயில்பவராகவும் இருத்தல் வேண்டும். இரண்டு கால்கள் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகள் நல்ல நிலையில் உள்ளவா்களாகவும் மற்றும் வாகனத்தை நன்றாக இயக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோா், ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக பேட்டரியால் இயங்கும் வாகனம் மற்றும் வாகனம் வாங்க மானியம் பெறாதவா்களாகவும் இருத்தல் வேண்டும். மத்திய அல்லது மாநில அரசு ஊழியராக இருத்தல் கூடாது.

நிா்ணயிக்கப்பட்ட தகுதிகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள், தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்துப் பக்கங்களும்), உணவுப் பொருள் வழங்கல் அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகப் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2412590 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT