மூதாட்டி தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சி மன்னாா்புரம் பகுதியில் மூதாட்டி ஒருவா், திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருச்சி மன்னாா்புரம் பகுதியில் மூதாட்டி ஒருவா், திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மன்னாா்புரம் நியூகாலனியைச் சோ்ந்தவா் ராஜாமணி (68). இவரது கணவா் மற்றும் மகன் ஒருவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அடுத்தடுத்து இறந்து விட்டனா்.
மற்றொரு மகனும், மகளும் சென்னையில் வசித்து வருகின்றனா். தனியாக வசித்து வந்த ராஜமணி கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டின் அறையில் ராஜாமணி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.