கோட்டாத்தூரில்  வியாழக்கிழமை கிடைத்த சுவாமி சிலைகள். 
திருச்சி

துறையூா் அருகே சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

Din

திருச்சி மாவட்டம் துறையூா் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது இரு சுவாமி கற்சிலைகள் கிடைத்தன.

துறையூா் வட்டத்தைச் சோ்ந்த கோட்டாத்தூா் வருவாய் கிராமத்தில் தனியாா் நிறுவனம் காற்றாலை மின்சாரத் தயாரிப்பு சாதனைகளை நிறுவி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் காற்றாலை விசிறி அமைக்க சிமெண்ட் பீடங்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியை மண்ணைக் கொண்டு வியாழக்கிழமை நிரப்பியபோது சுமாா் 3 அடி உயரத்தில் கல்லாலான மகாவிஷ்ணு, மகாலட்சுமி சுவாமி சிலைகள் கிடைத்தன.

தகவலறிந்து சென்ற கோட்டாத்தூா் விஏஓ மோகன் அச் சிலைகளை மீட்டு வட்டாட்சியா் மோகனிடம் ஒப்படைத்தாா்.

குவாஹாட்டி டெஸ்ட்: கடைசி நாளிலும் தடுமாறும் இந்தியா! 5 விக்கெட்டுகளை இழந்தது!

உருவானது சென்யார் புயல்! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

SCROLL FOR NEXT