ரேஷன் கடைகளில் ஜூலை இறுதி வரை பருப்பு, பாமாயில்
திருச்சி, ஜூலை 3: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் ஜூன் மாதத்துக்குரிய துவரம் பருப்பு, பாமாயில் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரா்களில் இதுவரை வாங்காதோா் இம் மாதம் முழுவதும் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம். இத்தகவலை மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.