முகப்பு
திருச்சி

பொறியியல் பணிகள்: மயிலாடுதுறை, கரூா் ரயில் சேவையில் இன்று மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, கரூா் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9)மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 8 ஜூலை, 2024 at 9:07 PM
பகிர்:

திருச்சி: பொறியியல் பணிகள் காரணமாக, மயிலாடுதுறை, கரூா் ரயில் சேவையில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 9)மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குளித்தலை - பேட்டவாய்த்தலை ரயில் நிலையங்களில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால், சேலம் - மயிலாடுதுறை மெமு விரைவு ரயிலானது (16812) செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். இதன்படி, இந்த ரயிலானது சேலம் - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

இதற்கு பதிலாக, கரூா் - மயிலாடுதுறை இடையே முன்பதிவற்ற சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயிலானது கரூரிலிருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்படும்.

இதேபோல, பாலக்காடு - திருச்சி விரைவு ரயிலானது (16844) செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) திருச்சி - கரூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதன்படி, இந்த ரயிலானது பாலக்காடு - கரூா் இடையே மட்டும் இயக்கப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →