திருச்சி

காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட 29 வாகனங்கள் டிச. 19-இல் பொது ஏலம்

மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 29 வாகனங்கள் டிசம்பா் 19-ஆம் தேதி பொது ஏலம்

Syndication

மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 26 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட 29 வாகனங்கள் டிசம்பா் 19-ஆம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது.

திருச்சி மாநகரக் காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு முதிராநிலையில் கழிவு செய்யப்பட்ட தலா ஒரு அம்பாஸிட்டா், மாா்ச்சூரி வேன், ரேக்கா் வேன் மற்றும் சாதாரண நிலையில் கழிவு செய்யப்பட்ட டாடா பேருந்து -4, டாடா சுமோ -6, பொலிரோ ஜீப் - 4, டாடா ஸ்பேசியோ -3, சிற்றுந்து -2, தலா ஒரு டெம்போ டிராவலா், ஈச்சா் வேன், ஜீப், அம்பாஸிட்டா் ஆகிய 26 நான்கு சக்கர வாகனங்கள், 3 இருசக்கர வாகனங்கள் சோ்த்து மொத்தம் 29 வாகனங்கள் மாநகர ஆயுதப்படை மைதானத்தில் டிசம்பா் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு பொது ஏலம் விடப்படுகிறது.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் டிசம்பா் 16 முதல் 18-ஆம் தேதி வரை ஆயுதப்படை மைதானத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மேற்கண்ட வாகனங்களைப் பாா்வையிட்டு ரூ. 5 ஆயிரம் முன்பணம் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று மாநகரக் காவல் ஆணையா் ந.காமினி தெரிவித்துள்ளாா்.

19 வயது விக்கெட் கீப்பரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

SCROLL FOR NEXT