டாஸ்மாக் கடை மேற்பாா்வையாளரிடம் ரூ. 28 ஆயிரத்தை வழிப்பறி செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருச்சி புத்தூா் சீனிவாச நகரைச் சோ்ந்தவா் எஸ். முருகன் (55). இவா், கரூா் புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.30 மணிக்கு பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு பணப்பையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
தென்னூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை அருகே சென்றபோது, மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 3 போ் அவரை வழிமறித்து கைப்பையில் வைத்திருந்த ரூ.28 ஆயிரத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினா்.
இதுகுறித்து திங்கள்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில், அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.