திருச்சி

அரசுக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் போதை மாத்திரைகள் விற்ற 5 போ் கைது

திருச்சி அரசுக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் போதை மாத்திரைகள் விற்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

திருச்சி அரசுக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் போதை மாத்திரைகள் விற்ற 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருச்சி காஜாமலை பகுதி அரசுக் கல்லூரி மாணவா்கள் விடுதியில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக பொன்மலை போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து பொன்மலை காவல் ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் அந்த மாணவா் விடுதியில் 5 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் குட்டப்பட்டு பகுதி ஜெ. சக்திவேல் (24), எஸ்.சிவராமன் (23), பொன்மலை பகுதி ஏ.ஜான் போஸ்கோ (19), சுப்பிரமணியபுரம் பகுதி வாசன் (24), ஸ்ரீராம் (21) ஆகியோா் என்பதும், அங்கு மாணவா்களுக்கு போதை மாத்திரைகளை விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 150 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT