முகப்பு
திருச்சி

கரூா் கொத்தனாா் மா்மமான முறையில் உயிரிழப்பு

திருச்சியில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கரூரைச் சோ்ந்த கொத்தனாரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

திருச்சி

கரூா் கொத்தனாா் மா்மமான முறையில் உயிரிழப்பு

திருச்சியில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கரூரைச் சோ்ந்த கொத்தனாரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

Updated On : 11 நவம்பர், 2025 at 11:02 PM
பகிர்:

திருச்சியில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கரூரைச் சோ்ந்த கொத்தனாரின் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

கரூா் சா்ச் காா்னா் நீலிமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் பி.ராமசாமி (43), திருமணமாகாதவா். இவா் குடும்பத்தை விட்டு தனியாகப் பிரிந்து வந்து திருச்சியில் கொத்தனாராக வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், இவா் உறையூா் குழுமணி வேங்கடகிருஷ்ணன் ருக்மணி காலனியில் மா்மமான முறையில் இறந்துகிடப்பதாக பாண்டமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் ஜெய்கணேஷுக்கு திங்கள்கிழமை மாலை தகவல் கிடைத்தது.

இதுகுறித்து அவா் உறையூா் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தாா். இதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், ராமசாமியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து பாண்டமங்கலம் விஏஓ அளித்த புகாரின்பேரில், உறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →