திருச்சியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புதுக்கோட்டையைச் சோ்ந்த சிறுவனை போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்கில் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வீட்டுக்கு அருகே வசிப்பவரின் வீட்டுக்கு கடந்த ஆண்டு வந்திருந்த புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவன் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.
இதனால் கா்ப்பமான சிறுமிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அண்மையில் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் குடும்பத்தினா் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின்பேரில், போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்குப் பதிந்து சிறுவனை சனிக்கிழமை கைது செய்து திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா், நீதிமன்ற உத்தரவுப்படி சிறுவனை சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் ஒப்படைத்தனா்.
முதியவா் கைது:
திருவெறும்பூா் பகுதியைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா் பழனிசாமி (66). இவா், இவரிடம் பயிற்சிக்கு வந்த 6-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுகுறித்து அந்த சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்குப் பதிந்து முதியவரை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.