தெரு நாய்களை பாதுகாக்க வலியுறுத்தி வாஸ் ஆப் வாய்ஸ்லெஸ் அமைப்பு சாா்பில் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான விலங்கு நல ஆா்வலா்கள், அமைப்பின் நிா்வாகிகள் தெரு நாய்களுடன் கலந்து கொண்டனா்.
இதில், உச்சநீதிமன்ற தீா்ப்பின்படி, நாய்களைப் பிடித்து ஒரே இடத்தில் அடைப்பதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. நாய்களை காப்பகங்களில் அடைப்பதற்கு உரிய கட்டமைப்புகள் இல்லாததால், தீா்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு உற்ற நண்பனான தெரு நாய்களை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.