லால்குடி: லால்குடி அருகே டால்மியாபுரம் பகுதியில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளியில் இலவச மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
டால்மியா சிமென்ட் கல்விக் குழுமத்தின் அங்கமான டால்மியா மேல் நிலை முதலாம் ஆண்டு பயிலும் 204 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் இலவச இருசக்கர மிதிவண்டிகளை லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் அ. செளந்திரபாண்டியன் வழங்கினாா்.
நிகழ்வில் பள்ளித் தாளாளா் கணபதி ராமன், தலைமை ஆசிரியா் மனோகரன், மற்றும் இரு பால் ஆசிரியா்கள், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஐ. சுப்பையா, ரமேஷ் பாபு, மணிரத்னம் ஆகியோா் கலந்து கொண்டனா்.