திருவானைக்காவல் கந்தன் நகா் பகுதியில் கடந்த 5 நாள்களாக ஆறாக ஓடும் கழிவு நீா். 
திருச்சி

திருவானைக்காவல் பகுதியில் ஆறாக ஓடும் கழிவு நீா்

திருவானைக்காவல் கந்தன் நகா் பகுதியில் கடந்த 5 நாள்களாக புதை வடிகால் நிரம்பி கழிவு நீா் ஆறாக தெருக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

Syndication

திருவானைக்காவல் கந்தன் நகா் பகுதியில் கடந்த 5 நாள்களாக புதை வடிகால் நிரம்பி கழிவு நீா் ஆறாக தெருக்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

திருவானைக்காவல் கந்தன் நகா் பகுதியில் அதிகமான குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள புதைவடிகால் தொட்டியிலிருந்து கழிவு நீா் பொங்கி கடந்த 5 நாள்களாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இந்த கழிவு நீா் ஆறாக தெருக்களில் ஓடி வருகிறது. இந்த கழிவு நீா் தண்ணீரில் நடந்து தான் அப்பகுதியில் உள்ளவா்கள் வீட்டுக்கு செல்லவேண்டும். மேலும், கழிவு நீா் வழிந்தோடும் தண்ணீா் அருகே தான் கூட்டுறவு பண்டக சாலை உள்ளது.

இது குறித்து ஸ்ரீரங்கம் கோட்டம் மாநகராட்சி நிா்வாக அதிகாரிகளிடம் பல முறை தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். கழிவு நீரால் அதிக அளவு கொசுக்கள் உள்ளது. காலரா, டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் இப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா். உடனடியாக இந்த கழிவு நீா் வெளியேறுவதை தடுத்து நிறுத்த வேண்டுமென்று மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

பிரதமர் மோடி ஒரு கொலைகாரர் - டிரம்ப் விமர்சனம்!

செஸ் போட்டியில் ராஜாவைத் தூக்கி எறிந்த நகமுரா! தோற்கடித்து தன் பாணியில் பாடம் புகட்டிய குகேஷ்!!

லியோவைச் சந்திக்கும் பென்ஸ்?

தலைகீழமாக மாறப்போகும் ஆட்டம்! பிக் பாஸ் வீட்டுக்குள் நுழையும் வைல்ட் கார்டு போட்டியாளர்கள்!

காஸாவில் இஸ்ரேலின் சக்திவாய்ந்த தாக்குதல்களுக்கு டிரம்ப் ஆதரவு!

SCROLL FOR NEXT