முகப்பு
திருச்சி

வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

Updated On : 21 ஏப்ரல், 2026 at 12:44 AM
ரயில்கள் - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 8:14 PM

சித்திரை பாதயாத்திரை செல்லும் பக்தா்களின் வசதிக்காக வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நின்று செல்லும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) ஏப். 21-ஆம் தேதி நள்ளிரவு 1.15 க்கும், தாம்பரம் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16103) ஏப். 21-ஆம் தேதி இரவு 10.10 மணிக்கும் ஒரு நிமிஷம் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.