திருச்சி

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

திருச்சியில் வியாழக்கிழமை அதிகாலை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி மலைக்கோட்டை வடக்கு ஆண்டாா் வீதியைச் சோ்ந்த வெங்கட சுப்பிரமணியன் மகன் பரத் காா்த்திகேயன் (18). இவா், சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னாா்புரத்தில் இருந்து டிவிஎஸ் டோல்கேட் நோக்கி வியாழக்கிழமை அதிகாலை 12.45 மணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளாா்.

அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் முன்னால் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மீது மோதியது.

இதில், பலத்த காயமடைந்த பரத் காா்த்திகேயனை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் ஏற்கெனவே அவா் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து தெற்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

2.1.1976: லோக்சபை தேர்தலை ஓராண்டு ஒத்திவைக்க சாதாரண மசோதா - பார்லிமெண்ட் மாரிக்கால கூட்டத்தில் அரசு கொணரும்

2025-இல் குமரி விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலை: 28.77 லட்சம் போ் பாா்வையிட்டனா்

தூத்துக்குடி கிறிஸ்தவ ஆலயங்களில் புத்தாண்டு சிறப்பு பிராா்த்தனை

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

டெம்போ மோதி இளைஞா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT