அரியலூர்

சுத்தமல்லியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியல்

DIN

அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி திங்கள்கிழமை கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
 அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட சுத்தமல்லி கிராமத்தில் அரசு மதுக்கடை உள்ளது.
இக்கடை குடியிருப்பு  பகுதியில் அமைந்துள்ளதால் இப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் இக்கடையை அகற்ற கோரி போதுமக்கள் நீண்ட நாட்களாக  கோரிக்கை விடுத்தனர். ஆனால் கடை தொடர்ந்து அப்பகுதியில் செயல்பட்டு வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் திங்கள்கிழமை  அரியலூர் தா.பழூர் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்த உடையார்பாளையம் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு,  அதிகாரிகளிடம் பேசி கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT