ஜயங்கொண்டத்தில் தேசிய நூலக வார விழா
ஜயங்கொண்டம் நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜயங்கொண்டம் நூலகத்தில் 50-ஆவது தேசிய நூலக வார விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட நூலக அலுவலர் ஆ.ஜோதிமணி தலைமை வகித்தார். விழாவில் மாவட்ட நூலக அலுவலர் புதிதாக சேர்ந்த புரவலர்களுக்கு பட்டயம் வழங்கியும், அரியவகை நூல்கள் வழங்கியவர்களுக்கு சான்றிதழும் வழங்கிப் பேசினார்.
விழாவில் சிவஞானம்மாள் நினைவு அறக்கட்டளை சார்பில் 10 நாற்காலிகளும், அரிமா சங்கம் சார்பில் 5 நாற்காலிகளும் நூலகத்துக்கு வழங்கப்பட்டன.