அரியலூரில் எல்.ஐ.சி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு, எல்.ஐ.சி முதல்நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் எல்.ஐ.சி அலுவலகம் முன்பு, எல்.ஐ.சி முதல்நிலை அதிகாரிகள் சங்கம் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்கிட வேண்டும். வார வேலைநாள்கள் 5 என அறிவித்திட வேண்டும். புதிய பணி நியமனத்தை உடனடியாக நடத்திட வேண்டும்.
பொது இன்சூரன்ஸ் பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கண்ட சங்கத்தினர், ஒரு மணிநேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத் தலைவர் வீரசேகரபாண்டியன் தலைமை வகித்தனர்.