அரியலூர் நகர கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற கடன் வழங்கும் விழாவில் 100 பயனாளிகளுக்கு ரூ.43.55 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
விழாவுக்கு அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்று, மகளிர் சுய உதவி குழு, மாற்றுத் திறனாளிகள் கடன், தனிநபர் கடன், அடமானக் கடன், சிறு தொழில் தொடங்க தொழில் கடன், வீடு கட்ட கடன் உள்ளிட்டவைகளுக்கு சுமார் ரூ. 43.55 லட்சத்துக்கான கடன் தொகையை பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவுக்கு அரியலூர் நகர கூட்டுறவு வங்கித் தலைவர் ஓ.பி.சங்கர் தலைமை வகித்தார். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ.ராமஜெயலிங்கம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் பழனிவேல், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் செல்வராஜ், வங்கி துணை தலைவர் பழனியாண்டி, வங்கி மேலாளர்கள் சுமதி, கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மேலாண்மை இயக்குநர் சுரேஷ் அனைவரையும் வரவேற்றார்.