அரியலூர்

கோ-கோ போட்டியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதலிடம்

DIN

கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கோ-கோ விளையாட்டில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அணி முதலிடம் பெற்றது.
அரியலூர் மாவட்டம் விளாங்குடி அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கான 14ஆவது கோ-கோ போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக விளையாட்டுக் கழகம் சார்பில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டியில்
6 அணிகள் பங்கேற்றன. இறுதிப் போட்டியில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, துறையூர் கரட்டாம்பட்டி ஜெயராம் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியை தோற்கடித்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம், மண்டலங்களுக்கு இடையிலான கோ-கோ போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
அதேபோல, மூன்றாமிடத்துக்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி கே. ராமகிருஷ்ணன் தொழில் நுட்ப கல்லூரி, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப கழக கல்லூரியை வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வழிபாட்டு உரிமை மறுப்பு.. வேளார் சமூகத்தினர் புகார்!

பவர் பிளேவில் சிறப்பான பந்துவீச்சு; துஷார் தேஷ்பாண்டேவுக்கு ருதுராஜ் புகழாரம்!

இனியா, மிஸ்டர் மனைவி தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

3 முக்கிய விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - பாதுகாப்பு அதிகரிப்பு!

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

SCROLL FOR NEXT