அரியலூர்

தேர்தல் பணி:  முன்னாள் படைவீரர்கள் கவனத்துக்கு...

DIN

வரும் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பாதுகாப்புப் பணியில் காவல் துறையுடன்  இணைந்து பணிபுரிய முன்னாள் படைவீரர்களை ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. 
 எனவே, தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு ஏற்கெனவே விருப்பம் தெரிவித்துள்ள முன்னாள் இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதுவரை விருப்பம் தெரிவிக்காத முன்னாள் படைவீரர்களும் தங்களது அடையாள அட்டையுடன் தேர்தல் பாதுகாப்புப் பணிபுரிய ஏதுவாக, அரியலூர் மாவட்ட அண்ணா விளையாட்டரங்கில் ஏப்.16 அன்று காலை 9 மணிக்கு ஆஜராக வேண்டும்.  மேலும், விவரங்களுக்கு அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை 04329-221011 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்தல் அலுவலரும்,அரியலூர் மாவட்ட ஆட்சியருமான மு.விஜயலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கூழங்கலச்சேரி கிராமத்தில் குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

பிளஸ் 2: சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% போ் தோ்ச்சி

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தின் முதல் தலைவராக சஞ்சய குமாா் மிஸ்ரா பதவியேற்பு

குண்டா் சட்டத்தில் 31 போ் கைது

அரசு கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: முதல் நாளில் 18,806 போ் விண்ணப்பம்

SCROLL FOR NEXT