அரியலூர்

வீட்டில் தவறிவிழுந்து தொழிலாளி சாவு

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மின்விசிறி மாட்டும் போது பிளாஸ்டிக் சேர் உடைந்ததையடுத்து கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

DIN


அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே மின்விசிறி மாட்டும் போது பிளாஸ்டிக் சேர் உடைந்ததையடுத்து கீழே விழுந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.
மீன்சுருட்டி அருகேயுள்ள மெய்காவல்புத்தூர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (42). கூலித் தொழிலாளி. கடந்த 27 ஆம் தேதி இவரது வீட்டில் பிளாஸ்டிக் சேரில் ஏறி மின்விசிறி மாட்டிக்கொண்டிருந்தார். அப்போது சுமை தாங்காமல் சேர் உடைந்ததையடுத்து, கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த செல்வகுமார் அங்கு சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து மீன்சுருட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT