அரியலூர்

முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கியவர் கைது

DIN

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே முன்விரோத தகராறில் பெண்ணை தாக்கியவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்த கலைசெல்வன் மனைவி அகிலா(27). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமாருக்கும்(43) முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை இவர்களிடையே  ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த செந்தில்குமார், அகிலாவை தகாத வாத்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அகிலா அளித்த புகாரின் பேரில் உடையார்பாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பப்புவா நியூ கினியா நிலச்சரிவில் சிக்கி 670 பேர் பலி: ஐநா அதிகாரி தகவல்

டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு பாகிஸ்தான் முன்னேறும்; முன்னாள் வீரர் நம்பிக்கை!

ராணுவத் தலைமை தளபதி மனோஜ் பாண்டே பதவிக் காலம் நீட்டிப்பு

தில்லியில் தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் உரிமையாளர் கைது!

கேன்ஸ் திரைப்பட விழா: விருது வென்ற இயக்குநருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

SCROLL FOR NEXT