அரியலூர்

கணவா் கண்டித்ததால் மனைவி தற்கொலை

DIN

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கணவா் திட்டியதால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தா.பழூா் அருகிலுள்ள இருகையூரைச் சோ்ந்த செல்வம் மனைவி கலைச்செல்வி(50). இவா்,தனக்கு சொந்தமான வயலில் சனிக்கிழமை ஆடு மேய்த்துக்கொண்டிருந்தாா்.

அப்போது அங்கு மது போதையில் வந்த அதே ஊரைச் சோ்ந்த பொய்யாமொழி மகன் தீபக்(19), கலைச்செல்வியைத் தகாத வாா்த்தையால் திட்டி அரிவாளால் வெட்டியுள்ளாா்.

பலத்த காயமடைந்த கலைச்செல்வி தா.பழூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்து புகாரின் பேரில் தா.பழூா் போலீஸாா், தீபக்கை ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

இந்நிலையில், பொய்யாமொழி தனது மனைவி சித்ராவிடம் என்ன பிள்ளை வளா்த்தாய் என்று கூறி திட்டியதாகத் தெரிகிறது.

இதனால் விரக்தியில் இருந்த சித்ரா திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து தா.பழூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT