அரியலூர்

விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் மறியல்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

DIN

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே விலையில்லா மடிக்கணினி கேட்டு முன்னாள் மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தா.பழூர் அருகேயுள்ள உதயநத்தம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்தாண்டு மேல்நிலை வகுப்பில் படித்த மாணவர்கள் தங்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டுமெனக்கூறி பள்ளியின் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தா.பழூர் போலீஸார் மற்றும் பள்ளி தலைமையாசிரியர் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாணவர்களின் கோரிக்கை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

SCROLL FOR NEXT