அரியலூர்

மனைவி மாயம்: கணவர் புகார்

DIN

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே மாயமான பெண்ணைப் போலீஸார் தேடி வருகின்றனர். 
ஜயங்கொண்டம் அருகேயுள்ள காட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழமலை (39). இவருக்கும் இவரது மனைவி ரதிதேவி (38) என்பவருக்கும் திருமணமாகி 10 வயதில் பெண் குழந்தை, 6 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 
இந்நிலையில் தம்பதி  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 16 ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கோபித்துக்கொண்டு வெளியே சென்ற ரதிதேவி வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் ரதிதேவி கிடைக்கவில்லை. இதுகுறித்து ஆண்டிமடம் காவல் நிலையத்தில் பழமலை புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து தேடிவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

SCROLL FOR NEXT