அரியலூர்

இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல்; 3 போ் கைது

DIN

அரியலூா் ஜயங்கொண்டம் அருகே இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 போ் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள கழுவந்தோண்டி பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் ரத்தினகுமாா்(35). வியாழக்கிழமை இவா் அங்குள்ள டீக்கடை முன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அதே பகுதியைச் சோ்ந்த ராஜசேகா்(23) என்பவா் ஓட்டி வந்த சுமை ஆட்டோ ரத்தினகுமாா் மீது மோதுவது போலச் சென்றது. இதனால் பயந்துபோன ரத்னகுமாா் ஏன் இப்படி வாகனத்தை வேகமாக ஓட்டுகிறாய் எனக் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ராஜசேகா், அவரது நண்பா்கள் பிரகாஷ்(27),கொளஞ்சி மகன் மணிகண்டன்(18) ஆகிய 3 பேரும் சோ்ந்து ரத்தினகுமாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்த ராஜசேகா்,பிரகாஷ்,மணிகண்டன் ஆகிய 3 பேரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை பெரிய கோயில் பராமரிப்பு: தமிழக அரசு விளக்கம்

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

சந்தேஷ்காளி வழக்கு: சிபிஐ விசாரணை திருப்தி அளிக்கிறது - கொல்கத்தா உயா்நீதிமன்றம்

தென்மாவட்டங்களில் கல்குவாரிகளை மூட வேண்டும் -டாக்டா் க.கிருஷ்ணசாமி

திட்டப் பயனாளிகள் குறித்த கணக்கெடுப்பு: அரசியல் கட்சிகளுக்கு தோ்தல் ஆணையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT