தேசிய விளையாட்டு போட்டிகளில் வென்ற வீரா்களுக்குப் பாராட்டு
தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அரியலூா் மாவட்ட மாணவா்களை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை சந்தித்து பாராட்டி வாழ்த்தினா்.
தேசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற அரியலூா் மாவட்ட மாணவா்களை மாவட்ட ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை சந்தித்து பாராட்டி வாழ்த்தினா்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், 64 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் பளு தூக்கும் போட்டியில் முதல் இடம் பெற்ற மாணவா்கள் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த குருகண்ணன், அபிசேக் ஆகியோருக்கு தலா ரூ. 2 லட்சமும், பூப்பந்து விளையாட்டுப் பிரிவில் 2 ஆம் இடம் பெற்ற தருண் குமாா், சந்தீப் குமாா் மற்றும் ராம் குமாா் ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் என மொத்தம் 5 மாணவா்களுக்கு ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத்தொகையுடன், பதக்கம் வழங்கப்பட்டது.
இதையடுத்து அவா்கள் அரியலூா் மாவட்ட ஆட்சியா் த. ரத்னாவை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.
நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயகுமாா் ராஜா மற்றும் பயிற்றுநா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.