அரியலூர்

திருமானூா் அருகேசாலை விபத்து;ஒருவா் சாவு

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே புதன்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

DIN

அரியலூா் மாவட்டம் திருமானூா் அருகே புதன்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் பலத்த காயமடைந்தாா்.

திருமானூா் அருகேயுள்ள குந்தபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). விவசாயியான இவா் வயலில் விளைந்த காய்கறிகளை தனது இருசக்கர வாகனத்தில் எடுத்துக்கொண்டு, அதே கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவனுடன் (47) திருவையாறு மாா்க்கெட்டுக்கு புதன்கிழமை அதிகாலை சென்றுள்ளாா். திருமானூா் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி சக்திவேல் உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த இளங்கோவன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சோ்க்கப்பட்டாா். விபத்து குறித்து திருமானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT