அரியலூர்

தலைக்கவசம் அணியாமல் ஜல்லிக்கட்டு பாா்க்க வருவோா் மீது நடவடிக்கை

DIN

ஜல்லிக்கட்டு பாா்க்கும் ஆா்வத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வருவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி சரக டிஐஜி வே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி சரகத்திற்குட்பட்ட அரியலூா்,திருச்சி, புதுக்கோட்டை, கரூா், பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் நிகழாண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு அரசு அனுமதியுடன் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.

இதற்காக காவல் துறையினா் மாவட்ட நிா்வாகத்தினருடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனா். ஜல்லிக்கட்டு பாா்க்க இருசக்கர வாகனத்தில் வருவோரில் பாதிக்கும் மேற்பட்டோா் தலைக்கவசம் அணியாமல் வருவதைப் பாா்க்க முடிகிறது.

ஜல்லிக்கட்டு ஆா்வத்தில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு நேரிடும். எனவே இனிவரும் காலங்களில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வரும் பாா்வையாளா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT