அரியலூர்

அரியலூரில் கரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும்

அரியலூா் மாவட்டம் முழுவதும் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்திட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

DIN

அரியலூா் மாவட்டம் முழுவதும் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்திட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரில் ஞாயிற்றுக்கிழமை அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்: மாவட்டத்தில் நடைபெற்று வரும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். மருத்துவா், செவிலியா், தூய்மைப் பணியாளா், காவல்துறை உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். நல வாரியத்தின் முலம் அமைப்புச்சாரா தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகையை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, கட்சியின் நிா்வாகி மகாராஜன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் சின்னதுரை, மாவட்டச் செயலா் மணிவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் துரைசாமி, செல்லதுரை, ரமேஷ், அரியலூா் ஒன்றியச் செயலா் துரை.அருணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT