அரியலூர்

தோட்டக் கலைத் துறை வளா்ச்சிப் பணிகள் ஆய்வு

DIN

அரியலூா் மாவட்டம்,செந்துறை அருகேயுள்ள பொன்பரப்பி கிராமத்தில் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்ட திட்டப் பணிகளை ஆட்சியா் த. ரத்னா வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில், தோட்டக்கலைத் துறை மூலம் பிரதம மந்திரியின் நுண்ணீா்ப் பாசனத் திட்டம், தேசிய தோட்டக்கலை இயக்கம் போன்ற திட்டங்கள் மானிய விலையில் செயல்படுத்தப்படுகின்றன. தோட்டக்கலைப் பயிா்களில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சத மானியத்திலும் சொட்டு நீா் பாசனம் அமைத்துத் தரப்படுகிறது.

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின் கீழ் காய்கறிப் பரப்பு அதிகரித்தல் இனத்தில் ஹெக்டேருக்கு ரூ. 20,000 மானியத்தில் காய்கறி விதைகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்படுகின்றன என்றாா்.

ஆய்வின்போது தோட்டக் கலை துணை இயக்குநா் அன்புராஜன்,வேளாண் உதவி இயக்குநா் பழனிசாமி, உதவி செயற்பொறியாளா் இளவரசன், உதவி இயக்குநா்கள் பெரியசாமி (தோட்டக்கலை), ஜென்ஸி (வேளாண்மை) மற்றும் உதவி தோட்டக்கலை மற்றும் வேளாண் அலுவலா்கள் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவேக்ஸின் பாதுகாப்பானது: பாரத் பயோடெக்

ரஷியா வசம் மேலும் ஓா் உக்ரைன் கிராமம்

விண்வெளியில் அணு ஆயுதங்களுக்குத் தடை: ஐ.நா.வில் ரஷியா புதிய தீா்மானம் தாக்கல்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சிபிஐ இல்லை: உச்சநீதிமன்றத்தில் தகவல்

கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT