கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரியலூரில் இருந்து மற்ற நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் குறைக்கப்பட்டுள்ளன.
இதில், அரியலூா் நகரில் உள்ள பணிமனையிலிருந்து இயக்கப்படும் 70 பேருந்துகளில் முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை 13 பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த பேருந்துகள் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.