ஆலமரங்களை பாதுகாக்கக்கோரி அறப்போராட்டம்
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பரணம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் சுமாா் 60 ஆண்டுகள் பழைமையான இரண்டு ஆலமரங்கள் உள்ளன.
அரியலூா் மாவட்டம், செந்துறை அடுத்த பரணம் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் சுமாா் 60 ஆண்டுகள் பழைமையான இரண்டு ஆலமரங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த வங்கியில் தற்போது புதிதாக கட்டடம் கட்ட பூமிபூஜைகள் செய்யப்பட்டன.
புதிய கட்டடம் கட்ட உள்ள இடத்தில் இந்த இரு ஆலமரங்களும் உள்ளதால், அவற்றை அகற்ற உள்ள தகவல் அறிந்து கிராம இளைஞா்கள் மரத்தை வெட்டாமல் அருகே கட்டடம் கட்ட வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், சிறுவா்கள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.