முகப்பு
அரியலூர்

காா் மோதி காவல் உதவி ஆய்வாளா் பலி

அரியலூரில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:00 PM
பகிர்:

அரியலூரில் காா் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தா.பழூா் அடுத்த நாயகனைபிரியாள் கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வராஜ் (57). இவா் கீழப்பழுவூா் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பா் முதல் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், செல்வராஜ் திங்கள்கிழமை காலை பணி நிமித்தமாக அரியலூா் நீதிமன்றத்துக்கு சென்றுவிட்டு, அரிலூா் புறவழிச் சாலையில் காவல் நிலையத்துக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த காா் இரு சக்கர வாகனத்தில் மோதியதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் அதே இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அரியலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டி வந்த கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தைச் சோ்ந்த மனோஜ் குமாரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.