முகப்பு
அரியலூர்

அரியலூா் இந்திய கம்யூ. போராட்டம்

அரியலூரில் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா்  தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 40 பேரை அரியலூா் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:37 PM
பகிர்:

அரியலூரில் வருவாய் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணைச் செயலா் டி.தண்டபாணி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பங்கேற்ற 7 பெண்கள் உள்பட 40 பேரை அரியலூா் போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், ஜயங்கொண்டம் அஞ்சல் நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய துணைச் செயலா் என். ராஜா தலைமையில் மறியிலில் ஈடுபட்ட பெண் உள்பட 21 பேரும், தா.பழூரில் ஒன்றியச் செயலா் எஸ். அபிமன்னன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 15 பெண்கள் உள்பட 57 பேரும் கைது செய்யப்பட்டனா். திருமானூா் மத்திய கூட்டுறவு சங்கம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.மணியன் தலைமை வகித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.