தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப். 23-ல் பொது விடுமுறை!
சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்.23 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதைப் பற்றி...
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்.23 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் 30 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனு தாக்கல், ஏப்ரல் 6ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக, பள்ளி, கல்லூரிகளுக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டு விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறை பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் ஏப். 23 ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுவதாக தலைமைச் செயலர் உத்தவிட்டுள்ளார்.
வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் பொது விடுமுறை அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.